- பரமக்குடி
- முஸ்லிம் பள்ளி
- பள்ளி கல்வித் துறை
- தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை
- ஆரம்ப கல்வித் துறை
- பெரம்பலூர்
- தின மலர்
பரமக்குடி, ஜன.30: பள்ளிக்கல்வி துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பரமக்குடி கீழ முஸ்லீம் பள்ளி மாணவி வெண்கல பதக்கம் வென்றார். தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையும் தொடக்க கல்வித் துறையும் இணைந்து மாநில அளவிலான ஜுடோ போட்டிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஶ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 1000 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பாக பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளியை சார்ந்த மாணவி யுவஶ்ரீபிரபா 17 வயதுக்குட்பட்ட 63 கிலோ எடை பிரிவில் பல்வேறு மாவட்ட அணிகளை தோற்கடித்து 3ம் இடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்றார். இம்மாணவியையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா ஆகியோரை கீழமுஸ்லிம் ஜமாஅத் சபை தலைவர் சாகுல் அமீது, செயலாளர் சாதிக் அலி, பொருளாளர் லியாக்கத்தலிகான், பள்ளி தாளாளர் ஷாஜஹான், தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.
The post மாநில ஜுடோ போட்டியில் பரமக்குடி மாணவிக்கு வெண்கல பதக்கம் appeared first on Dinakaran.